Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Editorial / 2018 நவம்பர் 05 , மு.ப. 11:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேல்மாகாண சபையின் இன்றைய அமர்வுகள் ஆரம்பமான போது, அங்கு ஏற்பட்ட அமைதியின்மைக் காரணமாக சபையின் அமர்வுகள் 15 நிமிடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
மேல்மாகாண சபையில் அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நிசாந்த ஸ்ரீ வர்ணகுலசிங்க, நிரோசா அத்துகோரள ஆகிய இருவரும் இன்று எதிர்க்கட்சி ஆசனங்களில் அமர்ந்ததையடுத்தே சபையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், சபை அமர்வுகள் 15 நிமிடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நிசாந்த ஸ்ரீ வர்ணகுலசிங்க, நிரோசா அத்துகோரள ஆகிய இருவரும் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பிரதிநிதிகள் என்பது குறப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago