2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

‘மைத்திரி- மஹிந்த பயணத்துக்கு எதிரான செய்திகளையே பத்திரிகைகள் வெளியிடுகின்றன’

Editorial   / 2018 நவம்பர் 25 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வெளிவரும் நாளாந்த மற்றும் வாராந்த பத்திரிகைகள் மைத்திரி- மஹிந்த அரசாங்க பயணத்துக்கு எதிரான செய்திகளை வெளியிடுவதாக ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின்  தலைமையகத்தில் இன்று (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குறித்த பத்திரிகைகளின் தலையங்கங்கள் புதிய அரசாங்கத்துக்கு எதிரான வாதங்களைக் கொண்டிருப்பதாகவும் எனவே மைத்திரி- மஹிந்த அரசாங்கத்துக்கு எதிராக எழுத வேண்டாமென சகல ஊடகங்களிடமும் கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.

எனவே பத்திரிகைகள் எமக்குச் சார்பாக எழுத வேண்டாம். எமக்கு எதிர்ப்பு இல்லாத வகையில் எழுதுங்கள் என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .