Editorial / 2025 ஜனவரி 12 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}

பல மோட்டார் சைக்கிள்கள் திருட்டுகளில் தொடர்புடைய ஒரு சந்தேக நபர், ஐஸ் போதைப்பொருளுடன் களுத்துறை பிரதேச குற்றப் புலனாய்வு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
களுத்துறை தெற்கு காவல் பிரிவின் பன்வில ஹேன வட்ட பகுதியில் களுத்துறை பிரிவு குற்ற புலனாய்வு பணியகத்தின் அதிகாரிகள் குழு, சனிக்கிழமை (11) சோதனை நடத்தி, ஒரு கிராம் 750 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு சந்தேக நபரைக் கைது செய்தது.
அவர் களுத்துறை தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர் காலி மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சந்தேக நபரிடம் மேற்கொண்ட விசாரணையில், அவர் மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு வழங்கியது தெரியவந்தது. அதன்படி, காலி, பேருவளை மற்றும் பொத்தல காவல் பிரிவுகளில் சந்தேக நபரால் திருடப்பட்ட 05 மோட்டார் சைக்கிள்களை பொலிஸார் மீட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


8 minute ago
14 minute ago
25 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
25 minute ago
29 minute ago