2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

’மோதல்களில் பங்கெடுக்கமாட்டேன்’

Kamal   / 2019 செப்டெம்பர் 07 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக களமறிங்க, காணப்படும் மோதல்களில் பங்குதாரர் ஆகப்போவதில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். 

சிவில் அமைப்புகளுடன் நேற்று கொழும்பில் நடைபெற்ற சந்திப்பொன்றில் கலந்துகொண்டு மேலும் தெரிவித்துள்ள அவர்,

தற்போதும் மத அமைப்புக்கள் உட்பட பல சிவில் அமைப்புகள் பலவும் தான் ஜனாதிபதி வேட்பாளராக களமறிங்க வேண்டுமென கோரியுள்ளதாக தெரிவித்துள்ள அவர்,  ஐக்கிய தேசிய கட்சி சார்பில் யார் களமிறங்கினாலும் அனைத்து கூட்டணிகளின் விருப்பத்தையும் அவர் பெற்றுகொள்ள ​வேண்டுமெனவும் தெரிவித்தார். 

அதேபோல், தனக்கு தனிப்பட்ட அரசியல் பேராசைகள் எவையும் இல்லையெனவும், எதிர்கால சந்ததியினருக்கான அர்பணிப்புடன் செயற்பட தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .