2026 மார்ச் 05, வியாழக்கிழமை

யுத்த பூமியில் சிக்கித்தவிக்கும் 131 இலங்கையர்கள் குறித்த அதிர்ச்சி தகவல்

Freelancer   / 2026 மார்ச் 05 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

போர்ச் சூழல் காரணமாக சவூதி அரேபியாவில் 109 இலங்கையர்களும், ஓமானில் 22 இலங்கையர்களும் விமான நிலையங்களில் சிக்கியுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

ஓமானில் சிக்கியிருந்தவர்களில் சிலர் நேற்று அதிகாலை இலங்கை வந்தடைந்திருக்கலாம் எனவும் குறிப்பிட்டார்.

இதனிடையே, வெளிநாடுகளில் உள்ள உறவினர்களை மீட்கக் கோரி 10 கோரிக்கைகள் கிடைத்துள்ளதோடு, நான்கு பேர் தமது உறவினர்களுடனான தொடர்பை இழந்துள்ளதாகவும் அமைச்சர் சபையில் தெரிவித்தார். 

மேலும், பாதிக்கப்பட்ட நாடுகளின் பாதுகாப்பு கட்டுப்பாடுகளுக்கு அமைவாக அவர்களை மீட்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும் கூறினார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .