Editorial / 2026 ஜனவரி 18 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருளை விற்பனைக்காக வைத்திருந்த குற்றச்சாட்டில் ஊர்காவற்துறை பொலிஸாரினால் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேலணை பகுதியில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர்கள் என பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள போதை வியாபரிகளிடமிருந்து போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இருவரது உடைமையில் இருந்தும் 2கிராம் 350 மில்லி கிராம் ஹெரோயின் , 12 கிராம் ஐஸ் போதைப்பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , தமக்கு நாச்சிக்குடா பகுதியை சேர்ந்த போதை வியாபாரி ஒருவரே போதைப்பொருளை விநியோகிப்பதாக தெரிவித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து குறித்த போதை வியாபாரியை கைது செய்த பொலிஸார் போதைப்பொருளை வாங்குபவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
40 minute ago
42 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago
1 hours ago