2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

’யானையை கைவிட்டால் போட்டியிட போவதில்லை’

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

யானை சின்னத்தை தவிர வேறு எந்த சின்னத்திலும் தான் போட்டியிட போவதில்லை என, நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க  தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று (13) நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

இலட்சினையை மாற்றுவது தொடர்பில் யாருக்காவது பிரச்சினை இருந்தால் செயற்குழுவில் வாக்கெடுப்பு நடத்துவதற்கு கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இடமளிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய இலட்சினையில் போட்டியிட்டால் மக்கள் மத்தியில் அதனை பழக்கப்படுத்த காலம் எடுக்கும் என்றும் இதனால் கிடைக்கவுள்ள வாக்குகளை கூட இழக்கும் நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பெருந்தோட்ட மக்கள் யானை சின்னத்தில் வாக்களிக்க பழகியுள்ளதால் வேறு சின்னத்தை முன்வைத்தால் குழப்ப நிலை தோன்றும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .