2025 மே 21, புதன்கிழமை

ரக்ன லங்கா விவகாரம்: முன்னாள் கடற்படை தளபதிக்கு அழைப்பு

Gavitha   / 2015 நவம்பர் 04 , மு.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக் கடற்படையின் முன்னாள் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை  ஆணைக்குழுவுக்கு, இன்று புதன்கிழமை(04) அழைக்கப்பட்டுள்ளார்.

ரக்ன லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் மிதக்கும் ஆயுதக் களஞ்சியசாலை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளார் என அவ்வாணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ரக்ன லங்கா பாதுகாப்பு நிறுவனத்தின் தலைவர் விக்டர் சமரவீர ஆகியோர், இவ்விடயம் தொடர்பில் ஏற்கெனவே வாக்குமூலம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X