2025 ஜூன் 23, திங்கட்கிழமை

‘ ரஞ்சனின் கருத்தை நிராகரிக்கின்றேன் ‘

Editorial   / 2019 ஜூலை 15 , பி.ப. 02:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

   மகா சங்கத்தினர் தொடர்பில், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள கருத்துகளை நிராகரிப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் கடிதம் மூலம் விளக்கமளிக்குமாறு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால், இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க வெளியிட்டுள்ள கருத்துகள் தொடர்பில், கட்சித் தலைவர், கட்சி உறுப்பினர்களிடம் மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகவும் இது குறித்து, பிரதமர் என்ற ரீதியிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் ​தலைவர் என்ற ரீதியிலும் அதனை நிராகரிப்பதாக,பிரதமர் அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .