Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Simrith / 2025 மார்ச் 09 , பி.ப. 12:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து அரசாங்கம் புதிய விசாரணையை தொடங்கும் என்று பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்தார்.
ஊடகவியலாளர்களிடம் பேசிய வட்டகல, விக்ரமசிங்கேவின் சமீபத்திய அல் ஜசீரா நேர்காணலில் குறிப்பிடப்பட்ட பட்டலந்த அறிக்கை தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அரசாங்கம் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும் என்றார்.
மத்திய வங்கி பிணைமுறி மோசடி மற்றும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும் அவர் கூறினார். இந்த இரண்டு சம்பவங்களும் விக்ரமசிங்க பிரதமராக இருந்த காலத்தில் நடந்தவை.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு உறுதிபூண்டுள்ளதாகவும், ரணில் முன்னதாக அரசியல் பாதுகாப்பால் ஸ்தம்பதிக்கச் செய்த அனைத்து குற்றச்சாட்டுகள் மீதும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வட்டகல வலியுறுத்தினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
20 May 2025