Editorial / 2022 ஜனவரி 28 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன்
கொத்மலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்தேக்கத்துக்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் நேற்று (28) அன்று ஆணின் சடலமொன்று காலை 11.45க்கு மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமொன்று குறித்த ஓயாவில் இருப்பதை கண்ட பிரதேசவாசிகள் கொத்மலை பொலிஸருக்கு அறிவித்துள்ளனர். அதன்பின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட ஆண், நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா? அல்லது எவராவது கொலை செய்து ஓயாவில் எரிந்து சென்றார்களா? அல்லது தவறி விழுந்து உயிரிழந்தாரா? என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை. சுமார் 40ற்கும் 50ற்கும் இடையிலான வயது மதிக்கத்தக்கவர். மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
10 minute ago
11 minute ago
12 minute ago
19 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
12 minute ago
19 minute ago