2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

ரயிலுடன் ஜீப் மோதியதால் மூவர் காயமடைந்தனர்

Editorial   / 2019 ஜூலை 24 , பி.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹபரனை- பளுகஸ்வெவ, கல்கடவல பிரதேசத்தில் ஜீப் ஒன்று ரயிலுடன் மோதியதில், வைத்தியர் ஒருவர் உள்ளிட்ட மூவர் காயமடைந்துள்ளனரென, ஹபரனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பற்ற ரயில் கடவை ஊடாக ஜீப் வண்டி பயணித்தப் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த உதயதேவி ரயிலுடன், சுகாதார திணைக்களத்துக்கு சொந்தமான சுகாதார சேவைகள் பணிப்பாளரின் அலுவலக ஜீப் வண்டியே மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .