2025 ஜூன் 28, சனிக்கிழமை

ரயில் சேவைகள் பாதிப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 18 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

அவிசாவளை மற்றும் புவக்பிட்டிய ஆகிய பகுதிகளுக்கு இடையில் ரயிலொன்று தடம்புரண்டமை காரணமாக களனிவெளி ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக, அவிசாவளையில் இருந்து கொழும்பு, கோட்டை வரை பயணிக்கும் இரண்டு அலுவலக ரயில் சேவைகளிலும் தாமதம் ஏற்பட்டதாக ரயில் கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், பாதுக்கையில் இருந்து கொழும்பு, கோட்டை வரையிலான மூன்று அலுவலக ரயில் சேவைகள் இடம்பெற்றுள்ளன. 

தடம்புரண்ட ரயில் பெட்டியை மீண்டும் தண்டவாளத்தில் இணைக்கும் பணிகளுக்கு மேலும் சில மணித்தியாலங்கள் தேவைப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த ருஹுணு குமாரி, காலியில் வைத்து இன்று காலை தொழில்நுட்ப கோளாறுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .