2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

ரயில் விபத்துகளில் இருவர் உயிரிழப்பு

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டின் இருவேறு இடங்களில் இன்று (09) இடம்பெற்ற ரயில் விபத்துகளில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்றுகொண்டிருந்த ரயிலில் இருந்து கீழே விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டாரவளையை நோக்கி குறித்த ரயில் பயணித்துக்கொண்டிருந்த போது, அதிகாலை 5.50 மணியளவில் குறித்த நபர் ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு ரயிலில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த நபர் 21 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொல்காவலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் மோதி மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .