2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ராகம - ஜா-எல ரயில் முடங்கும்

Editorial   / 2018 நவம்பர் 17 , பி.ப. 04:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

புத்தளம் மார்க்கத்தின் ராகம மற்றும் ஜா- எல பகுதிகளுக்கிடையேயான ரயில் போக்குவரத்து, நாளை (18) இரவு 10 மணிமுதல் நள்ளிரவு 12 வரை இடம்பெறமாட்டாது என, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

ராகம மற்றும் ஜா- எல பகுதிகளுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தின் இரு மருங்கலும் முன்னெடுக்கப்படவுள்ள நீர்குழாய் திருத்தப் பணிகள் காரணமாக, ரயில் போக்குவரத்து இடம்பெறமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காலப்பகுதிக்குள் ஜா-எல மற்றும் புத்தளத்துக்கிடையிலான ரயில் போக்குவரத்து மாத்திரமே இடம்பெறும் எனவும் ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .