Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Editorial / 2019 ஏப்ரல் 26 , மு.ப. 07:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொண்ட தீவிரவாதிகளுக்கும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கும் தொடர்பிருப்பதாக தெரிவித்துள்ள எஸ்.பி.திஸாநாயக்க, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை பாதுகாப்பு தொடர்பான உயர் பதவிகளில் நியமிப்பதற்கு தனக்கு விருப்பமில்லை எனவும் தெரிவித்தார்.
சுதந்திர ஊடகக்கேந்திர நிலையத்தில் நேற்று(25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போது அவர் மேற்கண்டவாறுத் தெரிவித்ததோடு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கும் நாட்டில் உள்ள முஸ்லிம்களுக்கும் தொடர்பில்லை என்றார்.
அமைச்சர் ரிஷாட் பதியதீனுடைய குடும்பத்தினர் பல்வேறு தீவிரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் என தெரிவித்த அவர், ரிஷாட் மீது சுமத்தப்பட்டுள்ள கொலை, கொள்ளை தொடர்பான வழக்குகளை உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என்றார்.
ஷங்கிரிலா ஹோட்டல தற்கொலை குண்டுதாரி, ரிஷாட்டின் உத்தியோகப்பூர்வமற்ற செயலாளராக கடமையாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
9 hours ago