Editorial / 2025 நவம்பர் 16 , பி.ப. 12:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனைவியின் வீட்டிற்கு அருகில் வந்து வானத்தைநோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி, குடியிருப்பாளர்களைப் பயமுறுத்திய ஒருவர், மொனராகலை பொலிஸாரால் சனிக்கிழமை (15) அன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரின் மனைவி சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு அவரை விட்டுச் சென்றுவிட்டார், அந்த பெண்ணின் பிரதான வீட்டில் அவரது பாட்டிக்கு 13 ஆம் திகதி விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பிரிந்து சென்று தற்போது கொழும்பில் இருக்கும் தனது மனைவி அங்கு இருப்பார் என்று நினைத்து விருந்துக்கு வந்த சந்தேக நபர், ஆக்ரோஷமாக நடந்து கொண்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்.
இந்த சம்பவம் குறித்து பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட புகாரைத் தொடர்ந்து, மராவ கஹம்பனவைச் சேர்ந்த பண்டா என்ற சந்தேகநபர், ஒரு வயலில் மறைந்திருந்த போது, துப்பாக்கியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
சுமனசிறி குணதிலக
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026