2025 ஜூன் 25, புதன்கிழமை

விசேட தெரிவுக்குழுவின் கால எல்லை நீடிப்பு

Editorial   / 2019 ஓகஸ்ட் 13 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் கால எல்லையை மேலும் ஒரு மாத காலத்துககு நீடிக்க எதிர்பார்ப்பதாக குழுவின்தலைவரும், பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 23ஆம் திகதியுடன் குறித்த குழுவின் பணிகள் முடிவுக்கு வரவிருந்தன. இருப்பினும் மேலும் காலம் தேவைப்படுவதாக குமாரசிறி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதுடன், அன்றைய தினம் உயிர்த்த தாக்குதல் தொடர்பாக ஆராய நியமித்த ஜனாதிபதி குழுவின் உறுப்பினர்கள் மூவர் அழைக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .