2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

விபத்தில் ஒருவர் உயிரிழப்பு; அறுவர் காயம்

Editorial   / 2019 ஜூலை 28 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - கண்டி வீதியின் நிட்டம்புவ கலல்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

லொறி மற்றும் பஸ் என்பன மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தையடுத்து குறித்த பஸ் கவிழ்ந்துள்ளதுடன், பஸ் மற்றும் லொறியின் சாரதி உள்ளிட்ட 7 பேர் காயமடைந்த நிலையில் வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பின்னர் லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .