Editorial / 2020 மே 29 , பி.ப. 03:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே பீ.சி.ஆர் பரிசோதனைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்கு தேவைப்படும் உபகரணங்களை உடனடியாக வழங்குமாறு அதிகாரிகளுக்கு, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுறுத்தியுள்ளார்.
அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட கண்காணிப்பு நடவடிக்கையின் போது, இந்த அறிவுறுத்தலை அவர் வழங்கியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .