2025 ஜூலை 07, திங்கட்கிழமை

விமான நிலையத்துக்குள் பிரவேசிக்க கட்டுப்பாடு

Editorial   / 2020 ஜனவரி 28 , மு.ப. 11:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

வௌிநாட்டுக்கு செல்லும் அல்லது ​வௌிநாட்டிலிருந்து வருகைதரும் பயணிகள் தவிர்ந்த அவர்களின் உறவினர்களுக்கு விமான நிலையத்திற்குள் பிரவேசிப்பதற்கு இன்று (28) காலை 6 மணி முதல் தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சீனாவிலிருந்து நாட்டிற்கு வருகைதருவதற்கு முன்னர், இணையத்தளம் ஊடாக விசாவுக்கு விண்ணப்பித்தல் அவசியம் என குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் சீனாவிலிருந்து வருகைதருபவர்களை இலகுவாக பரிசோதிக்க முடியும் என திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் பசன் ரத்னாயக்க கூறியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .