2026 மே 14, வியாழக்கிழமை

வீல்பரோ விவகாரம் வினையானது

Nirosh   / 2021 மே 25 , பி.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயணத்தடை தளர்த்தப்பட்​டதை அடுத்து அத்தியாவசிய பொருள்களை ​கொள்வனவு செய்வதற்காக, ​இன்று 25ஆம் திகதி அதிகாலை 5 மணிமுதல், அங்காடிகளில் மக்கள் நிரம்பிருந்தனர்.

தங்களுக்குத் தேவையான அளவுக்கு பொருள்களை கொள்வனவு செய்துக்கொண்டனர்.

ஆனால், வாகனங்களை அனுமதிக்காமையால், தங்களுடைய வாகனம் நிறுத்தப்பட்​டிருக்கும் இடத்துக்கு தள்ளுவண்டியில் (வீல்பரோ) வைத்து பொருள்களை எடுத்துச் சென்றனர். 

அவ்வாறான வீடியோவுடன் கூடிய காட்சிகள், சமூக ​வலைத்தளங்களில் வைரலாகியிருந்தன.

இந்நிலையில், அவ்வாறு பொருள்களை தள்ளுவண்டியில் (வீல்பரோ) வைத்து தள்ளிச்சென்றவர், 25ஆம் திகதி இரவு கைது செய்யப்பட்டார். அளுத்கம, தர்ஹா நகரைச் சேர்ந்தவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

முகக் கவசம் அணியாத குற்றச்சாட்டிக் கீழே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .