2025 ஜூலை 22, செவ்வாய்க்கிழமை

வெளிநாடுகளில் இருந்து வந்த 157 பேருக்கு தொற்று

Editorial   / 2020 மே 26 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட் 19 சமூக பரவல் தற்போது இல்லை எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லுத்தினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, வெளிநாடுகளில் இருந்து வருகைதந்த 157 பேர் இதுவரை தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர்களில் குவைட்டிலிருந்து வருகைதந்த 90 பேரும்,  டுபாயிலிருந்து வருகைதந்த 18 பேரும் அடங்குவதாக, அவர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக நேற்று (25) இனங்காணப்பட்ட 41 பேரில் 40 பேர் குவைட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் எனவும் ஒருவர் டுபாயில் இருந்து வந்தவர் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், சமூகத்தில் இருந்து 405 பேர் வரை மாத்திரமே இதுவரை  தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர் என அவர் மேலும்  தெரிவித்துள்ளார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .