2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டுவந்தவர் கைது

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 01:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டீ.கே.ஜீ.கபில

வெளிநாட்டு தயாரிப்பிலான சிகரெட்டுகளை, சட்டவிரோதமானமுறையில் நாட்டுக்கு எடுத்துவந்த இலங்கை பிரஜையொருவர்,  கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (06) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கண்டி-கலகெதர பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய  நபரொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர்,  டுபாயிலிருந்து அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது, அவரை சோதனையிட்ட சுங்கப் பிரிவினர் 31,200 சிகரெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குறித்த பயணியிடம் விசாரணைகளை மேற்கொண்ட சுங்கப் பிரிவினர், குறித்த பயணிக்கு 50,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .