Editorial / 2025 மே 05 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

களுத்துறை மாநகர சபை வேட்பாளர் பந்துல பிரசன்ன அடையாளம் தெரியாத ஒருவரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை, நாகொட கம் சபா வீதியில் உள்ள ஒரு வீட்டின் முன் துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள்களில் வந்த இருவரும் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு களுத்துறை-பொம்புவல சாலையை நோக்கி தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
காயமடைந்த வேட்பாளர் களுத்துறையில் உள்ள நாகொட போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மருத்துவமனை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
5 hours ago
7 hours ago