2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

ஷாபிக்குப் பிணை

Editorial   / 2019 ஜூலை 25 , பி.ப. 08:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல் வைத்தியர் சிஹாப்தீன் ஷாபி, குருநாகல் நீதவான் நீதிமன்றத்தினால், இன்றிரவு 7 மணியளவில் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு இலட்சத்துக்கு 50ஆயிரம் ரூபாய் ரொக்கப்பிணையிலும், 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான நான்கு சரீரப் பிணைகளிலும் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வைத்தியர் ஷாபிக்கு எதிரான வழக்கு,  இன்று பிற்பகல் 1:30க்கு விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டது. சட்டமா அதிபரும் நீதிமன்றத்தில் ஆஜராகி, தனது தரப்பு வாதங்களை முன்வைத்திருந்தார்.

இந்நிலையில், பிணை வழங்குவதா? இல்லையா? என்பது தொடர்பில், இன்று மாலை 5:45க்கு, தீர்ப்பளிக்கப்படுமென நீதிமன்றம் தீர்மானித்தது. எனினும், இரவு 7 மணியளவிலேயே தீர்ப்பளிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .