2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஹோமாகம விவகாரம்: நால்வர் கைது

Gavitha   / 2016 ஜனவரி 31 , மு.ப. 05:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹோமாகம நீதவான் நீதிமன்ற வளாகத்தில் வன்முறையில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் மேலும் நான்கு பேரை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

32 மற்றும் 42 வயதுக்குட்பட்ட நபர்களே கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் இவர்கள் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பொதுபல சேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை, விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டதையடுத்து, ஹோமாகம நீதவான் நீதிமன்றத்துக்கு முன்னால் வன்முறையில் ஈடுபட்டவர்களை, கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் பொலிஸார் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X