Editorial / 2025 டிசெம்பர் 08 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 14 சந்தேக நபர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 2026 மார்ச் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, திங்கட்கிழமை (08) அன்று உத்தரவிட்டார்.
காவல்துறை கட்டளைச் சட்டம் மற்றும் நெடுஞ்சாலை கட்டளைச் சட்டத்தை மீறி, சந்தேக நபர்கள் சுதந்திர சதுக்கத்திற்கு அருகில் சட்டவிரோத தெரு நாடகத்தை 2022 நவம்பர் 14 ஆம் திகதியன்று நடத்தியதாகக் கூறி கறுவாத்தோட்டம் காவல்துறை இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளது.
வழக்கு அழைக்கப்பட்டபோது, கோப்பு அறிவுறுத்தல்களுக்காக சட்டமா அதிபரிடம் அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
இந்த வழக்கு திங்கட்கிழமை (08) அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர் ஹிருணிகா பிரேமச்சந்திர மற்றும் பிற பெண் சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள்.
உண்மைகளைக் கருத்தில் கொண்டு, சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்களுக்காக வழக்கை மார்ச் 16 ஆம் திகதிக்கு பிரதான நீதவான் ஒத்திவைத்தார்.
22 minute ago
29 minute ago
30 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
29 minute ago
30 minute ago
35 minute ago