2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்னுடன் அறுவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 02 , பி.ப. 12:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

402 கிராம் ஹெரோய்ன், 14 அலைபேசிகளுடன் 06 சந்தேகநபர்கள் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினால், நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள், இராஜகிரிய, மினுவங்கொட, வவுனியா, புளியங்குளம் மற்றும் வெயாங்கொட் ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 28,32,46,26,35 வயதடையவர்கள் என்று, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள், மீரிகம மற்றும் வெயாங்கொட பிரதேசங்களில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

முன்னதாக கடந்த ஜனவரி 01ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட 05 சந்தேகநபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தியபோது, அவர்கள் வழங்கிய தகவலின் பிரகாரமே அவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .