2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

ஹெரோய்ன் பொதிசெய்த இருவர் சிக்கினர்

J.A. George   / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹபாகே, வெலிசறை பகுதியில் ஒரு கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோய்ன் போதைப்பொருளுடன் பெண் உள்ளிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

898 கிராம் போதைப்பொருள் சந்தேக நபர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.

சந்தேக நபர்களை நேற்று (09) இரவு கைதுசெய்த சந்தர்ப்பத்தில் போதைப்பொருளை பொதிசெய்துகொண்டிருந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

வெல்லம்பிட்டிய பகுதியை சேர்ந்த சந்தேக நபர்கள் இருவரும் 26 வயதுடையவர்கள் என்றும் அவர்களை வத்தளை நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .