2025 ஜூன் 26, வியாழக்கிழமை

திரிசீடி அமைப்பின் 12வது ஆண்டு நிறைவு விழா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மூதூர் முறாசில்

'திரிசீடி' அமைப்பின் 12வது ஆண்டு நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (6) மூதூர் அந் நஹார் மகளிர் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் சாதனை படைத்த மாணவர்களுக்கும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கும்     பரிசில்களும் வழங்கப்பட்டன. 

'திரிசீடி' அமைப்பின் தலைவர் டாக்டர்  கே.எம்.ஸாஹிர் தலைமையில் இடம்பெற்ற இவ்விழாவில் தென்கிழக்குப்  பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயீல், மூதூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.ஹரீஸ்,கிழக்கு மாகாண பேரவைச் செயலகத்தின்  செயலாளர் எம்.சி.எம்.ஷெரீப், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் எம்.ஏ.அனஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .