2025 ஜூன் 26, வியாழக்கிழமை

111 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

Super User   / 2013 டிசெம்பர் 13 , மு.ப. 04:07 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்


முல்லைத்தீவு கடற் பரப்பில் வைத்து கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட 111 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திருகோணமலை பதில் நீதவான் திருநாவுக்கரசு திருச்செந்தில்நாதன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 படகுகளில் இலங்கை கடற் பரப்பிற்குள் அத்துமீறி  மீன் பிடியில்  ஈடுபட்டபோது கைதான  இந்த மீனவர்கள் திருகோணமலை துறைமுக பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை இரவு பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு  பதில் நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் இந்த மீனவர்களின் 15 படகுகளையும் நல்ல நிலையில் பேணுமாறும் பிடிக்கப்பட்ட மீன், இறால் மற்றும் நண்டு ஆகியவற்றை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கப்பெறும் பணத்தினை திருகோணமலை நீதிமன்றில் கையளிக்குமாறும் கடற் தொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் நீதவான் உத்தரவிட்டார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .