2025 ஜூன் 26, வியாழக்கிழமை

கிண்ணியாவில் 16 பேர் டெங்கு நோயினால் பாதிப்பு

Kogilavani   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒலுமுதீன் கியாஸ்


கிண்ணியா பிரதேசத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 16 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்;டுள்ளதாகவும் இதில் 11 பேர் சிறுவர்கள்  எனவும் கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.

கிண்ணியாவில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதேச அரச அதிகாரிகளுக்காக  ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் வியாழக்கிழமை (20) நகர சபை கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

கிண்ணிய நகரசபை தவிசாளர் எம்.எம்.ஹில்மி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,  
டெங்கு நோய் 2010 ஆம் ஆண்டு கிண்ணியா பிரதேசத்தை முழுமையாக ஆக்கிரமித்தது. அப்போது 497 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டு நான்கு பேர் மரணமடைந்தனர். அடப்பனார் வயல் பிரதேசத்தில் இருந்தே இந் நோய்காவி பரவியது.

இவ் வருடம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர் மாஞ்சோலை சேனை, ஜாயா வீதி, ஹிஜ்ரா வீதி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். எனவே இப்பிரதேசங்களிலே டெங்கு நுளம்புகள் இருப்பதாக இனங்காணப்பட்டுள்ளன.

டெங்கு காய்ச்சல் காரணமாக  5 வயது முதல் 15 வயது வரையானவர்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

பிரதேச பொதுமக்களுக்கு டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தாவிடின்  டெங்கு நுளம்பின் பெறுக்கத்தை எம்மால்  கடடுப்படுத்த முடியாது என்று தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு நுளம்பை ஒழிப்பதற்கு சட்டத்தை உரியவாறு அமுல்படுத்தல், பாடசாலை ரீதியாக மாணவர்களுக்கு விளக்கமளித்தல், ஜூம்ஆ தொழுகைகளில் விழிப்புணர்வு தொடர்பாக உரையாற்றல், பிரதேச செயலக கள உத்தியோகத்தர்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தல், சுற்றுப்புறச் சூழல் சிரமதான வேலைகளில் பொது மக்களை ஈடுபடுத்தல் போன்ற தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.

இக் கூட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலாளர், பிரதேச இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0

  • Ash Monday, 03 March 2014 05:54 AM

    இன்று முஸ்லிம்கள் முஸ்லிம்களாக இல்லை. இஸ்லாம் சுத்தம் ஈமானில் பாதி என்கிறது. சுத்தமில்லாதவர் சரியானதொரு இஸ்லாமியனாக இருக்க முடியாது. இஸ்லாம் கூறும் வாழ்நெறி பின்பற்றப்படாமையே பல பாரிய நோய்களுக்கு காரணமாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .