2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

திருமலை புளியங்குளத்தில் 2 கோடி ருபாய் செலவில் வடிகான்

A.P.Mathan   / 2013 ஜூலை 20 , மு.ப. 09:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடமலை ராஜ்குமார்
 
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை எல்லையில் உள்ள புளியங்குளம் கிராமத்தின் பிரதான வீதியில் ஒன்டரை கிலோமீற்றர் நீளமுள்ள வடிகான், 2 கோடி ருபாய் செலவில் நிர்மானிக்கப்பட்டு வருகிறது.
 
இப்பணியானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வரும் புறநெகும (சிறு நகர அபிவிருத்தி) எனும் அபிருத்தி திட்டத்தின் மூலம் பட்டினமும் சூழலும் (உப்புவெளி) பிரதேச சபையினால் அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 
 
அவ்வடிகான் மூலமாக பல ஆண்டுகள் மழை வெள்ளத்தால் மிகுந்த கஸ்டத்தை அனுபவித்து வந்த மக்கள் அப்பிரச்சினையில் இருந்து தீர்வு பெறுவார்கள் என தெரிவிக்கின்றனர்.
 
இப்பணியில் சரியான தெரிவை மேற்கொண்டு தமது நேரடி மேற்பார்வையில் வழிநடத்தம் பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் விஜேந்திரன் மற்றும் உபதலைவர் நிசாந்தன் மற்றும் ஏனைய உறுப்பினர்களுக்கும் புளியங்குளம் கிராம அபிவிருத்திச் சங்கம் மற்றும் பொதுமக்கள் நன்றி தெரிவிக்கின்றனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .