2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

வாழ்வெழுச்சித் திட்டத்தின் 5 ஆம் கட்டம்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 04 , மு.ப. 04:58 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எச்.ஏ. ஹுஸைன்


'திவிநெகும' வாழ்வெழுச்சித் திட்டத்தின் 5 ஆம் கட்;டம் பற்றிய கலந்துரையாடல் நேற்று வியாழக்கிழமை திருகோணமலை உப்புவெளியில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் பொருளாதார அபிவிருத்திப் பிரதியமைச்சருமான சுசந்த புஞ்சிநிலமேயின் தலைமையில் திவிநெகும 5 ஆம் கட்டத் ஆரம்பம் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றது.

உப்புவெளி பிரதேச சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரீ.ரீ.ஆர். டிசில்வா, திட்டமிடல் அதிகாரி குகவதனி பரமேஸ்வரன், சமூர்த்தி உதவி ஆணையாளர் எஸ்.திரிமான, திருகோணமலை மாவட்ட பிரதேச செயலாளர்கள், உதவித் திட்டமிடல் அதிகாரிகள், பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் பட்டதாரிப் பயிலுநர்கள், கிராம சேவையாளர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என சுமார் ஐந்நூறிற்கும் மேற்பட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

வாழ்வெழுச்சித் திட்டத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் கட்டங்கள் வெற்றிகரமாக அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் ஐந்தாம் கட்டத்தை மேலும் ஆக்கபூர்வமானதாக முன்னெடுக்கவுள்ளதாக அங்கு பிரதியமைச்சர் சுசந்த புஞ்சிநலமே தெரித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .