2025 ஜூன் 25, புதன்கிழமை

திருமலையில் கைதான இந்திய மீனவர்கள் 7 பேர் விடுதலை

Suganthini Ratnam   / 2014 ஜூன் 27 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற  குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட  இந்திய மீனவர்கள் 07 பேரையும் திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் தி.சரவணராஜா  நேற்று வியாழக்கிழமை விடுவித்துள்ளார்.

ரோலர் படகொன்றில் வந்த இம்மீனவர்கள் 07 பேரையும் கடந்த 19ஆம் திகதி கைதுசெய்த கடற்படையினர், துறைமுக பொலிஸாரிடம் இவர்களை  ஒப்படைத்தனர்.

இதனைத் தொடர்ந்து, கடந்த 20ஆம் திகதி திருகோணமலை நீதவான்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இவர்களை   எதிர்வரும் 04ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவான் தி.சரவணராஜா  உத்திரவிட்டிருந்தார்.

இந்நிலையில், மேற்படி நீதிமன்றத்தில் நேற்றையதினம்  இம்மீனவர்கள் 07 பேரும் ஆஜர்படுத்தப்பட்டபோது விடுதலை செய்யப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .