2025 ஜூன் 28, சனிக்கிழமை

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு பயணித்த குற்றச்சாட்டில் 83 பேர் கைது

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி 2 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மூலம் பயணம் செய்ததாகக் கூறப்படும் சுமார் 83 பேர் திருகோணமலை கடற்பரப்பில் இன்று திங்கட்கிழமை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

'காவிந்தி' என்ற ஆழ்கடல் மீன்பிடிப் படகில் 31 தமிழர்கள், 8 சிங்களவர்கள்  உட்பட 39 பேரும் (26 ஆண்கள், ஒரு பெண், ஒரு சிறுமி, 3 சிறுவர்கள்) 'பிரசன்சனி' என்ற படகில்  35 தமிழர்களும் 6 சிங்களவர்களும் 3 முஸ்லிம்களுமாக 44 பேரும் (43 ஆண்கள், ஒரு பெண்) திருகோணமலை கடற்பரப்பிலிருந்து 15 மைல்களுக்கு அப்பால்  பயணித்துக்கொண்டிருந்தபோது கடற்படையினரால் இடைமறிக்கப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, திருகோணமலை, மூதூர், கொச்சிக்கடை, மட்டக்களப்பு, ஹபரணை, புளத்சிங்கள, பலாங்கொடை, கல்பிட்டி, பதவி ஸ்ரீபுர, மன்னார் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் திருகோணமலைக்கு அழைத்துவரப்பட்டு மேலதிக விசாரணைக்காக குற்றப்புலனாய்வுப் பிரிவினிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். படங்கள்:- கடற்படை இணையத்தளம்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .