2026 மார்ச் 23, திங்கட்கிழமை

அடித்து காயப்படுத்திய சகோதரர் இருவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 15 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                     

ஒருவரை அடித்துக் காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சகோதரர்கள் இருவரை இம்மாதம் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ஹயான் மீ ஹககே, ஞாயிற்றுக்கிழமை (14) உத்தரவிட்டார்.                          

திருகோணமலை கன்னியாப் பிரதேசத்தைச் மேற்படி சகோதரர்களில் அண்ணன் காதலிக்கும் பெண்ணை பாதிக்கப்பட்ட நபரும் காதலித்துள்ளார். இந்நிலையில் அண்ணனும் தம்பியும் சேர்ந்து குறித்த நபருக்கு தாக்கியதில் காயமடைந்து அவர் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து அண்ணன் (வயது 27), தம்பி (வயது 24) ஆகிய இருவரையும் சனிக்கிழமை (13) கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .