Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 07, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 01 , மு.ப. 08:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
கிழக்கு மாகாணசபையில் இரண்டு அமைச்சுகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது என்றபோதிலும், வாக்களித்த தமிழ் மக்களின் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்துவிட முடியாது. மாகாண முதலமைச்சாலேயே கிழக்கு மாகாணத்தில் தீர்க்க முடியாது பல பிரச்சினைகள் உள்ளதாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் இல்லத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில், 'தம்மிடம் வரும் ஏராளமான விண்ணப்பங்கள் ஆசிரியர் இடமாற்றம் சம்மந்தமானவை. இங்கு நாம் அமைச்சுப் பதவி எடுத்தமை வெறுமனே ஆசிரியர் இடமாற்றம் தொடர்பான நடவடிக்கையை எடுக்க மாத்திரம் அல்ல. எம்முடைய எதிர்கால சந்ததியின் கல்வி வளர்ச்சி தொடர்பாக நாம் பணியாற்ற வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
பாடசாலை மாணவர்களுக்காகவே ஆசிரியர்களும் பாடசாலை அபிவிருத்தியுமாகும். ஓர் ஆசிரியரின் இடமாற்றம் தொடர்பாக நோக்கும்போது அந்த பாடசாலை மாணவர்களின் கல்வி தொடர்பாகவும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டியுள்ளது. எனவே பொருத்தமான இடமாற்றம் தொடர்பாகவே நாம் அனுமதி வழங்க முடியும்.
மேலும், நாம் பெற்றுள்ள அமைச்சுப் பதவியை வைத்து எமக்கு கிடைக்கும் நிதியின் மூலம் மிகவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை மட்டுமே நாம் அபிவிருத்தி செய்து வருகின்றோம். இதில் குறிப்பாக சம்பூர், சீதனவெளி, சலப்பையாறு போன்ற கிராமங்களுக்கு எமது அமைச்சு நிதியில்; சில அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றோம். எனினும் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட முடியாது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
4 hours ago