2025 ஜூன் 25, புதன்கிழமை

'தொகுதிவாரி, வட்டாரத் தேர்தல் முறை முஸ்லிம் சமூகத்துக்கு பாதகம்'

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 01 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஒலுமுதீன் கியாஸ்

தொகுதிவாரி நாடாளுமன்றத் தேர்தல் முறையும் உள்ளூராட்சிமன்றத்துக்கான வட்டாரத் தேர்தல் முறையும் தேசிய ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு மிகப்பெரிய பாதகமாக அமையப் போகின்றது. இந்நிலையில், அரசாங்கம் கொண்டுவரவுள்ள புதிய அரசியல் யாப்பு முறையானது இவற்றை நிவர்த்தி செய்து முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பையும் அரசியல் ரீதியான உரிமையையும் உறுதிப்படுத்த வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்றூப் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம் சமூகம் கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு தீர்வு காணும் வகையில் பாடசாலை அதிபர்களுடனான கலந்துரையாடல், கிண்ணியா பொதுநூலகக் கேட்போர் கூடத்தில் ஞாயிற்றுக்கிழமை (31) மாலை நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .