2025 மே 16, வெள்ளிக்கிழமை

130 பேருக்கு காணி உறுதிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 10 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- ஏ.எச்.ஏ.ஹுஸைன், எம்.எஸ்.எம்.நூர்தீன், அப்துல்சலாம் யாசீம்

திருகோணமலையில் 30 வருடங்கள் கடந்தும் குடியிருப்புக் காணிகளுக்கான உறுதிகள் கிடைக்காமல் இருந்த 130 பேருக்குக் காணி உறுதிகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் வழங்கி வைத்தார்.

திருகோணமலை குளக்கோட்டன் நூலகக் கேட்போர் கூடத்தில் திங்கட்கிழமை (09) வீதி அபிவிருத்தி, காணி அமைச்சர் ஆரியவதி கலப்பதி தலைமையில்  இந்நிகழ்வு நடைபெற்றது.

திருகோணமலை, பட்டினமும்சூழலும் பிரதேச சபை, தம்பலகாமம் பிரதேச சபை ஆகிய எல்லைகளுக்கு உட்பட்ட குடியிருப்பாளர்களுக்கே காணி உறுதிகள் வழங்கப்பட்டன.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .