Thipaan / 2016 ஓகஸ்ட் 18 , மு.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தீசான் அஹமட்
திருகோணமலை, குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செந்தூர் பகுதியைச் சேர்ந்த இருவருரை, 1.5 லீற்றர் வடிசாராயத்துடன் கைதுசெய்துள்ளதாக, குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த நபர்கள் இருவரும் மீன்வாடிக்கு வடிசாராயம் கொண்டு செல்வதாக, பொலிஸாருக்கு நேற்று மாலை (17) கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், அவர்களை சோதனைக்குட்படுத்திய போது, இருவரிடமிருந்தும் தலா 750 மில்லி லீற்றர் வடிசாராயம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் குச்சவெளிப் பொலிஸார் தெரிவித்தனர்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago