Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஒலுமுதீன் கியாஸ்
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள உள்ளூராட்சிமன்றத்துக்கான வட்டாரமுறைத் தேர்தலானது திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களுக்கு மட்டுமன்றி, தமிழர்களுக்கும் பாதகமாக அமையுமென திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார்.
கிண்ணியாவிலுள்ள அவரது காரியாலயத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், '1976ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதிவாரியான எல்லை நிர்ணயம் காரணமாக முஸ்லிம்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதேபோன்று, தற்போது வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத்துக்கான எல்லை நிர்ணயம் காரணமாக தமிழ், முஸ்லிம் ஆகிய இரு சமூகங்களும் திருகோணமலை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலிருந்து சிறுபான்மைச் சமூகங்களைப் பாதுகாப்பதற்காக கடந்த 06 மாதகாலமாக மாவட்ட முஸ்லிம்கள் தொடர்பாக ஆராய்ந்து அரசாங்கத்திடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளேன். இந்த விடயத்தில் சரியான தீர்வைப் பெற்றுக்கொடுக்கும்வரை போராடுவேன்' என்றார்.
மூதூர்த்தொகுதி 210 சதுர கிலோமீற்றராக சுருக்கப்பட்டு, திருகோணமலைத்தொகுதியும் 190 சுருக்கப்பட்டு இந்த இரு தொகுதிகளிலிருந்து கபளீகரம் செய்யப்பட்ட 690 சதுர கிலோமீற்றர் நிலத்தைக் கொண்டு புதிதாக சேருவிலத்தொகுதி உருவாக்கப்பட்டது.
இதனை மையமாகக் கொண்டே தற்போதைய வட்டார எல்லை நிர்ணயம் செய்யப்ட்டு உள்ளுராட்சிமன்ற சபைகளுக்கான வர்ததமானி அறிவித்தல் வெளியிட்டு புதிய தேர்தலுக்கு அரசாங்கம் செல்கின்றது.
இந்த தேர்தல் மூலம் ஏற்படப்போகின்ற பாதிப்புக்களை வாக்காளர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு அறிந்துகொள்ள முடியும்.
'மேலும் 23,393 வாக்காளர்களைக் கொண்ட கிண்ணியா நகரசபைக்கு 08 உள்ளூராட்சிமன்ற அங்கத்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது 2,924 வாக்காளர்களுக்கு ஒரு அங்கத்தவர் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. அவ்வாறே, 17,496 வாக்காளர்களைக் கொண்ட கிண்ணியா பிரதேச சபைக்கு 08 உள்ளூராட்சிமன்ற அங்கத்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது 1,766 வாக்காளர்களுக்கு ஒரு அங்கத்தவர் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது.
இதேவேளை, 5,649 வாக்காளர்களைக் கொண்ட கோமரங்கடவெலப் பிரதேசத்துக்கு 10 உள்ளூராட்சி அங்கத்தவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். இது 565 வாக்காளர்களுக்கு ஒரு அங்கத்தவர் என்ற அடிப்படையில் அமைந்துள்ளது. இது முஸ்லிம்களுக்குச் செய்யப்பட்ட மிகப் பெரிய அநீதியாகும்.
இதேவேளை, 40,586 வாக்காளர்களைக் கொண்ட மூதூர் பிரதேச சபைக்கு 13 அங்கத்தவர்களை வழங்கியுள்ளீர்கள். 9,415 வாக்காளர்களைக் கொண்ட சேருவில பிரதேசசபைக்கு 10 அங்கத்தவர்களும் 33,850 வாக்காளர்களைக் கொண்ட கந்தளாய் பிரதேச சபைக்கு 13 அங்கத்தவர்களும் 5,814 வாக்காளர்களைக் கொண்ட மொரவெவ பிரதேச சபைக்கு 10 அங்கத்தவர்களும் 8,563 வாக்காளர்களைக் கொண்ட பதவிசிரிபுரவுக்கு 10 அங்கத்தவர்களும் என்றால், எங்களால் எவ்வாறு இதனை ஏற்றுக்கொள்ள முடியும்.
எனவே, எந்த மூலாதாரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த வட்டார உள்ளூராட்சிமன்ற சபைகள் உருவாக்கப்பட்டன?
சனத்தொகை மூலாதாரத்தைக் கொண்டு அது உருவாக்கப்பட்;டதென்றால், முஸ்லிம்களை அதிகமாகக் கொண்ட திருகோணமலை மாவட்டத்தில் ஏன் முஸ்லிம்களுக்கான உள்ளூராட்சிமன்றப் பிரதிநிதிகள் குறைய வேண்டும். ஏன் தமிழர்களுக்கான பிரதிநிதிகள் குறையவேண்டும். முஸ்லிம்கள் முதலாவதாகவும் அடுத்து தமிழர்களும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
சிங்கள மக்களுக்கு வழங்கப்பட்ட அந்த வரப்பிரசாதங்களை நாங்கள் பறிக்க விரும்பவில்லை. அவர்களின் சனத்தொகை விகிதாசாரத்துக்கேற்ப வழங்கப்பட்டுள்ள வட்டாரமன்ற அங்கத்தவர்கள் தொகைக்கு போல் சிறுபான்மைச் சமூகத்துக்கும் மறுசீரமைப்புச் செய்யப்பட வேண்டுமென்றே கேட்கிறேன்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago