2026 மார்ச் 23, திங்கட்கிழமை

வவுனியாவில் சிறுமி கொலை செய்யப்பட்டமையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 26 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடமலை ராஜ்குமார்,பதுர்தீன் சியானா

வவுனியா, உக்குளான்குளத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை திருகோணமலை உவர்மலையிலுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

திருகோணமலை மாவட்ட கடத்தப்பட்டடோர், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாசம், அமரா குடும்பத் தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம்,  பெண்கள் வலையமைப்பு போன்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .