Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 03 , மு.ப. 03:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விபரங்கள் தொடர்பில் ஆராயும் வகையிலான விசேட கூட்டமொன்று திருகோணமலையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விபரங்களை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவில் திருகோணமலையில் வெள்ள சேத விபரங்களை மதிப்பீடு செய்வதற்காக கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், அம்பாறை வெள்ள சேத விபரங்களை மதிப்பீடு செய்வதற்காக மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமான் லெப்பை, மட்டக்களப்பு வெள்ள சேத விபரங்களை மதிப்பீடு செய்வதற்காக மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இக்குழுவினர் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ள சேத விபரங்களை மதிப்பீடு செய்து அதன் விபரங்களை மத்திய அரசிற்கு சமர்ப்பிக்கவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago