2025 மே 14, புதன்கிழமை

கிணற்றில் வீழ்ந்த சிறுவன் சடலமாக மீட்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 11 , மு.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

கிண்ணியாவில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனொருவன் கிணற்றில் வீழ்ந்த நிலையில்  சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

முகமது சஜித் (வயது 3) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் ஆவார்.

நேற்று நண்பகல் வீட்டிலிருந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவனைக் காணவில்லையென பெற்றோர் தேடியபோது,  வீட்டின்  பின்புறமாகவுள்ள கிணற்றில் குறித்த சிறுவன் சடலமாக  மிதப்பதை கண்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு பொலிஸார் முன்னிலையில் குறித்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .