2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

சிறாஜ் நகர் முஸ்லிம் மகா வித்தியாலய திறப்பு விழா

Super User   / 2011 மார்ச் 05 , மு.ப. 09:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இசுரு திட்டத்தில் உருவாக்கப்பட்ட தம்பலகாமம், சிறாஜ் நகர் முஸ்லிம் மகா வித்தியாலயம் எதிர்வரும் திங்கட்கிழமை கல்வி அமைச்சர் பந்துல குணவர்தனவினால் திறந்துவைக்கப்படவுள்ளது.

வித்தியாலய அதிபர் வீ.எஹீயா தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடற்தொழில் நீரியல் வள பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சிநிலமே, மத விவகார பிரதி அமைசசர் எம்.கே.டீ.எச்.குணவரதன, திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர எம்.எஸ்.தௌபீக், கிழக்கு மாகாண ஆளுநர் ரியல் அட்மிரல் மொஹான் விஜேவிக்கிரம, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க முன்னாள் அமைச்சர் நஜீப் ஏ மஜீட் உட்பட பலர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .