2025 மே 08, வியாழக்கிழமை

கிழக்கு மாகாணத்துக்கு புதிய பிரதி பொலிஸ் மா அதிபர்

Menaka Mookandi   / 2011 ஓகஸ்ட் 18 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அமதோரு அமரஜீவ)

கிழக்கு மாகாணத்துக்கான புதிய பிரதி பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஜகத் அபேசிறி நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்தில் நிலவும் மர்ம மனிதர்கள் தொடர்பான அசாதாரண சூழ்நிலையை அடுத்து, பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்ககோனினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, மர்ம மனிதர்கள் தொடர்பில் கிழக்கு மாகாண மக்களை தெளிவுபடுத்தி அங்கு அமைதியான சூழ்நிலையை உருவாக்கும் பொறுப்பு சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர தலைமையில், மட்டக்களப்பு, வாகரை பிரதேசத்தில் மர்ம மனிதர்கள் தொடர்பான தெளிவூட்டல் நடவடிக்கைகள் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0

  • meenavan Thursday, 18 August 2011 07:57 PM

    சிங்கள அடிப்படைவாதிகளின் வேகம் பூஜிதவை சுனாமியைவிட வேகமாக தாக்கிவிட்டது.

    Reply : 0       0

    fathima Thursday, 18 August 2011 08:04 PM

    போலிஸ் மா அதிபர் மாறினாலும் மர்ம மனிதன் மாறமாட்டான் போலிருக்கே .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X