2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மூத்த பத்திரிகையாளர் குருநாதர் கௌரவிப்பு

Super User   / 2011 டிசெம்பர் 31 , மு.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட், கஜன்)

கலாபூஷண விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் சின்னையா குருநாதர் திருகோணமலை மாவட்ட ஊடவியலாயர் சங்கத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

வருட இறுதியை சிறப்பாக கொண்டாடும் வகையில் திருகோணமலை மாவட்ட ஊடவியலாயர் சங்கத்தினால் நேற்று வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்விலேயே இவர் கௌரவிக்கப்பட்டார்.

திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்க தலைவர் ஏ.எல்.றபாய்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை நகர சபை தவிசாளர் க.செல்வராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பத்திரிகை துறையில் 53 வருடங்களை நிறைவு செய்து, கலாபூஷண விருது பெற்ற சின்னையா குருநாதர்  பொன்னாடை போர்த்தி பண முடிச்சி வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X