Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை
Kogilavani / 2012 மார்ச் 07 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரமன், கஜன்)
திருகோணமலை மாவட்ட பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பான்ட் வாத்திய இசைப்போட்டியில் திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரியின் பான்ட் வாத்தியக்குழு முதலாம் இடத்தை பெற்றுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த சிங்கள மற்றம் தமிழ் மொழி பாடசாலைகளுக்கடையில் இப்போட்டி திருகோணமலை மைக்கேசியர் விளையாட்டரங்கில் இன்று நடத்தப்பட்டது.
இப்போட்டியில் ஏழு பாடசாலை அணிகள் பங்கு பற்றியிருந்தன. இதில் ஆறு தமிழ் மொழி பாடசாலைகளும் ஒரு சிங்கள மொழி மூலப்பாடசாலையும் பங்கு பற்றின.
இந்நிகழ்வில் திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராசா, பட்டணமும் சூழழும் பிரதேச செயலாளர் திருமதி சசிதேவி ஐலதீபன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விமானப்படை மற்றும் கடற்படை உட்பட கொழும்பு சர்வதேச மேலைத்தேய இசைக்கல்லூரி விரிவுரையாளர்களை கொண்ட நடுவர்கள் முன்னிலையில் இப் போட்டிகள் நடைபெற்றன.
போட்டியின் இரண்டாம் இடத்தை ஸ்ரீ சன்முகா இந்து மகளிர் கல்லூரியும் மூன்றாம் இடத்தை உவர் மலை விவேகனந்தா கல்லூரியும் பெற்றன.
Suthayini Sutha Thursday, 08 March 2012 04:29 AM
பக்க சார்பான போட்டி..
Reply : 0 0
sanjaysingam Thursday, 08 March 2012 04:55 PM
எங்கள் கல்லூரி இந்து
வாழ்க ஷண்முக வாழ்த்துக்கள் அழுகை
உங்கள் பாடசாலைஇன் வரம்
Reply : 0 0
Tharshini Wednesday, 14 March 2012 12:32 AM
தரமான வெளிமாவட்ட நடுவர்களை கொண்ட இப்போட்டி பக்க சார்பானதாக இருக்க முடியாது.
Reply : 0 0
thuva Thursday, 05 April 2012 04:23 AM
பக்கசார்பு என்பது தோற்பவர்கள் கூறும் வழமையான வார்த்தைகள்....
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
4 hours ago